
தேவையான பொருட்கள்:
- புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
- கறிவேப்பிலை - கால் கப்
- காய்ந்த மிளகாய் - 10
- கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
- தனியா - 2 டேபிள்ஸ்பூன்
- நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
- கருப்பட்டி - சிறிய துண்டு
- உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை :
முதலில் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, தனியா மூன்றையும் சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கவேண்டும் .
பின் புளி, கருப்பட்டி, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவேண்டும் . மீதமுள்ள நல்லெண்ணெயை சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து சுருள வதக்கவேண்டும் .பின் புளிப்பு, காரம், இனிப்புச் சுவையுடன் துவையல் தயார்!
பின் புளி, கருப்பட்டி, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவேண்டும் . மீதமுள்ள நல்லெண்ணெயை சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து சுருள வதக்கவேண்டும் .பின் புளிப்பு, காரம், இனிப்புச் சுவையுடன் துவையல் தயார்!
0 Comments