
நெஞ்சு சளியில் அவதிப்படுபவர்களுக்கு மட்டன் நெஞ்செலும்பு சூப் செய்து கொடுத்தால் உடலுக்கு வலிமை கிடைக்கும்.
அதுமட்டுமின்றி உடம்பு அளுப்பு என்று கூறும் நபர்களுக்கு உகந்த நாட்டு மருந்து ஆகும்.
அதுமட்டுமின்றி உடம்பு அளுப்பு என்று கூறும் நபர்களுக்கு உகந்த நாட்டு மருந்து ஆகும்.
ஆஸ்துமா, வரட்டு இருமல் , சோம்பல் உடையவர்களுக்கு எங்கள் வீட்டில் ஆத்தாவின் நாட்டு வைத்தியம் இது தான்.
இன்று இந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- நெஞ்செலும்பு - 1/2 கிலோ
- சின்ன வெங்காயம் - 15
- தக்காளி - 2
- சீரகம், மிளகு - சிறிது
- கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
- உப்பு - சிறிது
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- பச்சைமிளகாய் - 4
- பூண்டு பற்கள் 3 ( அம்மியில் நசுக்கியது)
- மஞ்சள்பொடி - சிறிது
செய்முறை :
1. வெங்காயம், ப.மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2.கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
3.மட்டன் நெஞ்செலும்பை நன்றாக கழுவி வைக்கவும்.
4.இஞ்சி, பெருஞ்சீரகத்தை ஒன்றுபாதியா அம்மியில்க தட்டி வைக்கவும்.
4. குக்கரில் மரசெக்கு நல்லெண்ணெய் காயவைத்து அதில் மிளகு, சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம், பூண்டு விழுது, தக்காளி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், சேர்த்து நன்றாக வதக்கவும்.
5.தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கியதும் மட்டன் நெஞ்செலும்பை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.
6.அடுத்து அதில் உப்பு, மஞ்சள் பொடி போட்டு 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி 8 விசில் போட்டு மிதமான தீயில் 10 நிமிடம் வேக விடவும்.
7.வடச்சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, தட்டி வைத்துள்ள இஞ்சி, பெருஞ்சீரகத்தை போட்டு தாளித்து சூப்பில் கொட்டி 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
8.கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
9.சத்தான மட்டன் நெஞ்செலும்பு சூப் ரெடி.
2.கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
3.மட்டன் நெஞ்செலும்பை நன்றாக கழுவி வைக்கவும்.
4.இஞ்சி, பெருஞ்சீரகத்தை ஒன்றுபாதியா அம்மியில்க தட்டி வைக்கவும்.
4. குக்கரில் மரசெக்கு நல்லெண்ணெய் காயவைத்து அதில் மிளகு, சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம், பூண்டு விழுது, தக்காளி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், சேர்த்து நன்றாக வதக்கவும்.
5.தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கியதும் மட்டன் நெஞ்செலும்பை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.
6.அடுத்து அதில் உப்பு, மஞ்சள் பொடி போட்டு 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி 8 விசில் போட்டு மிதமான தீயில் 10 நிமிடம் வேக விடவும்.
7.வடச்சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, தட்டி வைத்துள்ள இஞ்சி, பெருஞ்சீரகத்தை போட்டு தாளித்து சூப்பில் கொட்டி 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
8.கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
9.சத்தான மட்டன் நெஞ்செலும்பு சூப் ரெடி.
0 Comments